திமுகவை வழிநடத்த கட்சிக்குள்ளேயே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தவெக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இங்கும் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும், நீட் தேர்வே வேண்டாம் என்று ஒரு சிலரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே, திமுகவின் தேவையில்லாத வேலையைப் பார்த்து வருகின்றனர். ஜென் ஸீ திமுக என்ற டீ-சர்ட்டை அணிந்துகொண்டு, ரூ. 200 கொடுத்து போராட்டக்காரர்களுக்கு மத்தியில் ஒரு சிலரை உதயநிதியோ யாரோ அனுப்புகின்றனர்.
உதயநிதியை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். முதலில் ஜென் ஸீ என்றால் என்ன? என்பதை உதயநிதிக்கு யாரேனும் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
இந்த மாதிரியான கோமாளித்தனமான வேலைகளை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான வேலைகளை உதயநிதி செய்ய வேண்டும். முதலில் அவருக்கு ஒரு சுய பரிசோதனை வேண்டும்.
அவரது தந்தை இருந்தபோது, யார் தலைவர் என்றே தெரியாமல், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி முடித்துவிட்டுச் சென்று விட்டார். அவர் இருந்தவரையில், கடைசி வரைக்கும் அவருடைய அரசு என்றே அவர் சொல்லவில்லை. உதயநிதிக்கும் அதே சந்தேகம்தான். அதனால்தான் ஜென் ஸீ திமுக என ஏதோ வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்.
திமுகவை வழிநடத்துவதற்கு உதயநிதிக்கு தகுதி உள்ளதா? அல்லது கனிமொழிக்கு தகுதி உள்ளதா? என அவர்களின் கட்சியினரிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தச் சொல்வோம். அந்த வாக்கெடுப்பின் முடிவுகளைக்கூட உதயநிதி வெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில், அவரின் தகுதியை அவர்களின் கட்சியினருக்கே தெரியும்" என்று தெரிவித்தார்.
Summary
Minister Nirmal Kumar questions whether Kanimozhi or Udhayanidhi has the credentials to lead the DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதை மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும்: நிர்மல் குமார்
பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி! 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி! - நிர்மல் குமார்
கரூர் சம்பவம்! மு.க. ஸ்டாலின், செந்தில்பாலாஜிக்கு நிர்மல்குமார் அடுக்கடுக்கான கேள்விகள்

பரந்தூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடக்கமா? நிர்மல் குமார் விளக்கம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


