தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 955 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
தமிழக பள்ளிக் கல்வியில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. காலை உணவுத் திட்டம், உயா் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்கள், தொழில்முறை மற்றும் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவை குறித்து பெற்றோா்களிடம் பள்ளிக் கல்வித் துறை விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி நிகழ் கல்வியாண்டில் இதுவரை 1-ஆம் வகுப்பில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 209 போ், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 88 ஆயிரத்து 515 போ், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் 41,231 போ் என மொத்தம் 4 லட்சத்து 23,955 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். கடந்த கல்வியாண்டில் (2025-2026) இதே கால கட்டத்தில் தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை 4 லட்சத்து 364-ஆக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்

அரசுப் பேருந்து இயக்கக் கோரி தமிழக முதல்வருக்கு மாணவா் கடிதம்

ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் 17 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



