2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரம்! கர்நாடகத்தில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு

கர்நாடகத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிக்கப்பட்டது குறித்து...

Posters of CM Vijay’s film 'Jana Nayagan' were removed in Mandya

முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு - ANI

Published On :

கர்நாடகத்தில் காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வரும்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு கர்நாடகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடகத்தின் மாண்டியாவில் தமிழக முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த விஜய்யின் போஸ்டரை கிழித்து விஜய சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Summary

Amid rising tensions over the Cauvery issue, posters of Tamil Nadu CM Vijay’s film 'Jana Nayagan' were removed in Mandya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.