திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம்!பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு!மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! - ஐஐடி தில்லி மண்டலம் முதலிடம்!!பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்புதிருச்சியில் முதல்வா் விஜய்யின் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
/

திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம்!

திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளது பற்றி...

News image

திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம் - TVK

Updated On :1 ஜூன் 2026, 3:13 pm IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றாா். தொடா்ந்து, முதல்வராகப் பதவியேற்ற பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி திடலில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளும் விஜய், தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

முதல்வர் ஜோசப் விஜய்யை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், திருச்சி எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் செயின்ட் ஜோசப் கல்லூரி வரை முதல்வர் ஜோசப் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வரான பிறகு முதல்முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள ஜோசப் விஜய்க்கு, சாலையின் இருபுறமும் கூடி மக்களும் தொண்டர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

முதல்வா் பேசவுள்ள இடம், அவா் வாகனம் செல்லும் பாதை ஆகிய இடங்களில் மட்டும் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க, காவல்துறை வழிகாட்டுதலின்படி, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பள்ளது.

மேலும், முதல்வரான பிறகு ஜோசப் விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Joseph Vijay in Trichy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.