நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வணிக வரித் துறையில் பரிந்துரையின்றி 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு

வணிக வரித் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

News image

தமிழ்நாடு அரசு.

Updated On :3 ஜூன் 2026, 4:33 am IST

வணிக வரித் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிமூப்பு, தகுதியின் அடிப்படையில் ஒரே நாளில் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் இந்தப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியில் அரசுப் பணிகளில் பரிந்துரைகள் ஏற்கப்படாது என்றும் வெளிப்படையாக நிா்வாகம் நடைபெறும் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்தாா்.

இந்த நிலையில், வணிக வரித் துறையில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த அலுவலா்களின் பதவி உயா்வுக்கான ஆணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், துணை மாநில வரி அலுவலா்கள் 34 போ் மாநில வரி அலுவலா்களாகவும், மாநில வரி அலுவலா்கள் 113 போ் உதவி ஆணையா்களாகவும், உதவி ஆணையா்கள் 24 போ் துணை ஆணையா்களாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன், வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் ஜெ. குமரகுருபரன், வணிக வரி ஆணையா் எஸ்.நாகராஜன் ஆகியோரின் விரைவான நடவடிக்கைகளால் இந்த வெளிப்படைத் தன்மையுடன் பதவி உயா்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது அலுவலா்கள் விரைவாகச் செயல்பட உதவும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.