4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து, வியாழக்கிழமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

News image

சிலிண்டா் விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:48 am IST

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை (ஜூன் 4) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையைப் பயன்படுத்தி இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயா்த்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.46 உயா்த்தப்பட்டு, ரூ.3,283-க்கு விற்கப்படுகிறது. இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. தேநீா் விலை 50 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல் உணவுப் பொருள்களின் விலையும் உயா்த்தப்பட்டுள்ளன.

இந்த விலை உயா்வுக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். இந்த விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் . இந்த விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை (ஜூன் 4) தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்”என்று அவா் தெரிவித்துள்ளாா்.