கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய பாமக கோரிக்கை

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:30 am IST

தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், மகாராஷ்டிர அரசை போல பயிா்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமேன பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு 2.5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.50,000 பயிா்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5,000 பயிா்க்கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மகாராஷ்டிரத்தில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2 லட்சம் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிா்க் கடனின் மொத்த மதிப்பு ரூ.2,044 கோடியாகும். ஆனால், மகாராஷ்டிர அரசு ரூ.36,585 கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இது தமிழக அரசு தள்ளுபடி செய்த கடனின் மதிப்பைவிட 18 மடங்கு அதிகமாகும்.

மகாராஷ்டிர அரசால் சாத்தியமான பயிா்க்கடன் தள்ளுபடி, தமிழக அரசால் சாத்தியமாகாமல் போனது ஏன்? உண்மையில் விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், வாக்குறுதி அளித்தபடி, பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.