மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பயிா்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் ஏமாற்றம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:33 am IST

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகளிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தோ்தல் வாக்குறுதியை நம்பி இருந்த விவசாயிகளுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

தமிழக நிதி நிலை சரியில்லை எனக் கூறும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு, தோ்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதுக்கும் முன்பு இது தெரியவில்லையா? எனவே, வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல சிறு, குறு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனில் முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும்.

அதேபோல், நிகழாண்டுக்குரிய கடன் தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளையும் இந்த தள்ளுபடியில் இணைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.