15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பயிா்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் ஏமாற்றம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:33 am IST

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகளிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தோ்தல் வாக்குறுதியை நம்பி இருந்த விவசாயிகளுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

தமிழக நிதி நிலை சரியில்லை எனக் கூறும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு, தோ்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதுக்கும் முன்பு இது தெரியவில்லையா? எனவே, வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல சிறு, குறு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனில் முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும்.

அதேபோல், நிகழாண்டுக்குரிய கடன் தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளையும் இந்த தள்ளுபடியில் இணைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.