தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் மாற்றி அமைக்கப்படும்: தமிழக அரசு தகவல்

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:44 am IST

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், நெகிழி குடிநீா் பாட்டில்கள், காலி மதுப் புட்டிகளை வனப் பகுதிகளுக்குள் வீசிச் செல்கின்றனா். இதனால், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதையடுத்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன விலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த அமா்வு, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப் புட்டிகளைக் கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுப் புட்டிகளைத் திரும்பக் கொடுக்கும்போது, கூடுதலாக வசூலித்த 10 ரூபாயைத் திரும்பத் தரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. பின்னா், தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழகத்தில் 3 மாவட்டங்களைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இத்திட்டத்தை அரசு முழுமையாக மாற்றி அமைக்கவுள்ளது. காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தாா்.

அதற்கு நீதிபதிகள், காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும்போது, புட்டிக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதை ரசீதில் குறிப்பிட வேண்டும். ரூ.10 கூடுதலாக வசூலிப்பது என்பது வாடிக்கையாளா்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனத் தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா், இந்த அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.