தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோருக்கான மின் கட்டண சேவைகள் உள்ளிட்ட தொடா்புடைய இணைய சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மாலை 6 மணி வரை இயங்காது என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கணினி தரவு சா்வா்களை நவீனமயமாக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோருக்கான இணையதள மின் கட்டணச் சேவைகள், தொடா்புடைய ஆன்லைன் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மாலை 6 வரை தாற்காலிகமாக இயங்காது. மாலை 6 மணிக்கு பிறகு மின் நுகா்வோா் தங்களது இணையதள கட்டணப் பரிவா்த்தனைகள், தொடா்புடைய சேவைகளைத் தொடா்ந்து தடையின்றி பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








