அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை மறுத்து மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், வீ தி லீடர்ஸ் என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய அவர், புதிய கட்சியையும் தொடங்கவிருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசால் தனக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு உயரடுக்கு பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உளவுத்துறை அளிக்கும் அச்சுறுத்தல் அறிக்கையின் அடிப்படையில் இசட் பாதுகாப்பு வழங்குவது முடிவு செய்யப்படுகிறது.
பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி வகித்தபோது, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன்படி, அண்ணாமலை பாதுகாப்புக்காகச் சுமார் 36-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள், சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தொடர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், பாஜகவிலிருந்து விலகியதால், தனக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Did Annamalai return his Z+ category security?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








