பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?

தனக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை வேண்டாம் என அண்ணாமலை கூறியது குறித்து...

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 11:43 am IST

அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை மறுத்து மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், வீ தி லீடர்ஸ் என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய அவர், புதிய கட்சியையும் தொடங்கவிருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அரசால் தனக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு உயரடுக்கு பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உளவுத்துறை அளிக்கும் அச்சுறுத்தல் அறிக்கையின் அடிப்படையில் இசட் பாதுகாப்பு வழங்குவது முடிவு செய்யப்படுகிறது.

பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி வகித்தபோது, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன்படி, அண்ணாமலை பாதுகாப்புக்காகச் சுமார் 36-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள், சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தொடர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பாஜகவிலிருந்து விலகியதால், தனக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Did Annamalai return his Z+ category security?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.