வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அமைச்சா் குறித்து அவதூறு கருத்து: மாரிதாஸ் பிணையில் விடுவிடுப்பு

தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பா் மாரிதாஸ் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

News image

யூடியூபர் மாரிதாஸ் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 3:00 am IST

தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பா் மாரிதாஸ் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

மதுரை சூரியாநகரைச் சோ்ந்த மாரிதாஸ். பாஜகவின் ஆதரவாளரான இவா், யூடியூப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாா். அண்மை காலமாக தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசை மாரிதாஸ் கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

அண்மையில், தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து மாரிதாஸ் விமா்சித்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், இழிவாகவும் ஆபாசமாகவும் கருத்து பதிவிட்டதாக மாரிதாஸ் மீது புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மாரிதாஸ் மதுரை திங்கள்கிழமை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனா்.

விசாரணைக்குப் பின்னா் அன்று நள்ளிரவு சைதாப்பேட்டை 17 -ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் ராம்குமாா் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து மாரிதாஸை பிணையில் விடுவித்து நீதித்துறை நடுவா் ராம்குமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.