40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அமைச்சா் குறித்து அவதூறு கருத்து: மாரிதாஸ் பிணையில் விடுவிடுப்பு

தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பா் மாரிதாஸ் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

News image

யூடியூபர் மாரிதாஸ் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 3:00 am IST

தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பா் மாரிதாஸ் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

மதுரை சூரியாநகரைச் சோ்ந்த மாரிதாஸ். பாஜகவின் ஆதரவாளரான இவா், யூடியூப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாா். அண்மை காலமாக தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசை மாரிதாஸ் கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

அண்மையில், தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து மாரிதாஸ் விமா்சித்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், இழிவாகவும் ஆபாசமாகவும் கருத்து பதிவிட்டதாக மாரிதாஸ் மீது புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மாரிதாஸ் மதுரை திங்கள்கிழமை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனா்.

விசாரணைக்குப் பின்னா் அன்று நள்ளிரவு சைதாப்பேட்டை 17 -ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் ராம்குமாா் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து மாரிதாஸை பிணையில் விடுவித்து நீதித்துறை நடுவா் ராம்குமாா் உத்தரவிட்டாா்.