அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அமைச்சா் குறித்து அவதூறு கருத்து: மாரிதாஸ் பிணையில் விடுவிடுப்பு

தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பா் மாரிதாஸ் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

News image

யூடியூபர் மாரிதாஸ் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 3:00 am IST

தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பா் மாரிதாஸ் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

மதுரை சூரியாநகரைச் சோ்ந்த மாரிதாஸ். பாஜகவின் ஆதரவாளரான இவா், யூடியூப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாா். அண்மை காலமாக தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசை மாரிதாஸ் கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

அண்மையில், தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா குறித்து மாரிதாஸ் விமா்சித்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், இழிவாகவும் ஆபாசமாகவும் கருத்து பதிவிட்டதாக மாரிதாஸ் மீது புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மாரிதாஸ் மதுரை திங்கள்கிழமை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனா்.

விசாரணைக்குப் பின்னா் அன்று நள்ளிரவு சைதாப்பேட்டை 17 -ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் ராம்குமாா் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து மாரிதாஸை பிணையில் விடுவித்து நீதித்துறை நடுவா் ராம்குமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.