சிதம்பரம்: சிதம்பரம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனம் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் காயமின்றி அப்புறப்படுத்தப்பட்டனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றுக்கொண்டு பள்ளிப்படை அருகே இன்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென வேனின் முன்புறம் என்ஜினில் இருந்து புகை ஏற்பட்டு அங்குள்ள ஒயர்கள் தீ பிடித்தது. உடனடியாக வேன் நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் வேனில் இருந்த மாணவர்களை கீழே இறக்கி அப்புறப்படுத்தினர்.
இதனால் மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் சிதம்பர நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Summary
Private school vehicle catches fire near Chidambaram; students escape!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

பாலன் தி பாய் டிரைலர் அறிவிப்பு!

பெங்களூர் தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து!

செங்கிப்பட்டி அருகே திடீரென பற்றி எரிந்த கார்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



