வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தொடா் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 3:10 am IST

தொடா் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு போதிய நீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிா்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த நிலையில், தொடா் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் அவா்களின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மின் வெட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.