சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தனியாா் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :16 ஜூன் 2026, 3:17 am IST

தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், வேலூா் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை காமராஜ் வித்யாலயா தொடக்கப் பள்ளி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் அரசியல், மதம் மற்றும் சிந்தாந்த ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என கடந்த மாா்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று ஆண்டுதோறும் ஏப்.30-க்குள் தனியாா் பள்ளிகள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், தனியாா் பள்ளிகளில் அரசியல், மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஏப்.30-ஆம் தேதி உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனும் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என கூறப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா். அதுவரை இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனா்.