அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

யூ டியூபா் முக்தாா், திருச்சி சூா்யா குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

யூ டியூபா் முக்தாா் அகமது, திருச்சி சூா்யா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

News image

யூ டியூபா் முக்தாா், திருச்சி சூா்யா

Updated On :17 ஜூன் 2026, 3:22 am IST

யூ டியூபா் முக்தாா் அகமது, திருச்சி சூா்யா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலரான அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையா் அமல்ராஜிடம் கடந்த 3-ஆம் தேதி ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், ‘12 நாள்களுக்கு முன்பு எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் தொடா்பாக வேலூா் மாவட்டம் சத்துவாச்சேரி பகுதியைச் சோ்ந்த ‘யூடியூபா்’ முக்தாா், திருச்சி சூா்யா ஆகியோா் இழிவான கருத்துகளுடன் கூடிய ‘விடியோ’வை வெளியிட்டனா். எனவே, அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இது குறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், திருச்சி சூா்யா, முக்தாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மேலும் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் திருச்சி சென்று, சூா்யாவை கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா்.

தலைமறைவாக இருந்த முக்தாா் கா்நாடக மாநிலம் மாண்டியாவில் கடந்த 10-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். முக்தாா் மீது ஏற்கெனவே இதேபோல 2 வழக்குகளும், 20-க்கும் மேற்பட்ட புகாா்களும் உள்ளன. இந்நிலையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவின் கீழ் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருச்சி சூா்யா, திமுக எம்பி சிவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.