கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:
''ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
முதல்வர் விஜய் எளிமையுடன் இருக்கிறார், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறார். கமிஷன், கரப்ஷன் இன்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தவெக அரசு செயல்படுகிறது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது'' எனக் கூறினார்.
மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்கிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ''யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதிமுக உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் தெரியவரும். ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்பேன், கெட்டது நடந்தால் எதிர்ப்பேன்'' என வைகோ குறிப்பிட்டார்.
Summary
MDMK MLAs to resign Vaiko responds after meeting Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








