குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது குறித்து...

News image

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் - DNS

Updated On :17 ஜூன் 2026, 8:22 pm IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளதையொட்டி, திமுக உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 18) தொடங்கவுள்ளது. முதல் நாளில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றவுள்ளார். மறு​நாள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்​மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

இதனிடையே ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவது குறித்து திமுக எம்​எல்ஏக்களுக்கு ஆலோ​சனை வழங்கும் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.க. ஸ்டா​லின் தலை​மையில் தொடங்கியது.

இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, துணைத் தலைவர் நேரு, கொறடா எ.வ.வேலு உள்பட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியின் வியூகங்களை சட்டப்பேரவையில் திறம்பட எதிர்கொள்வது, எதிர்க்கட்சியாக திமுக உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Summary

The meeting of DMK MLAs has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.