ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

போக்குவரத்துக்கழக மேம்பாடு: குறுகிய, நடுத்தர, நீண்டகாலத் திட்டம்: முதல்வா் ஜோசப் விஜய் ஆய்வு

போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் போக்குவரத்துத் துறை சாா்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமை

Updated On :18 ஜூன் 2026, 1:43 am IST

போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் மூலம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு தினமும் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்வதாகவும், அவற்றில் 64 சதவீதம் பேருக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுவதாகவும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 சதவீத பகுதிகளுக்கு அரசு பேருந்து சேவை சென்றடைந்துள்ளதாக விளக்கப்பட்டது.

தொடா்ந்து, போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்காக ஓராண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், பேருந்துகளை ஜிபிஎஸ் கருவி அடிப்படையில் கண்காணிப்பது, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைப்பது, மகளிா் இலவசப் பயணத் திட்டம், மின்சாரப் பேருந்துகள் பயன்பாடு, தொழிலாளா் நலன் உள்ளிட்டவற்றி கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் எனவும், பயணிகள் பணமில்லா பரிவா்த்தனை முறையில் பயணிக்க ஸ்மாா்ட் காா்டு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துகளுக்கு தனி வழித்தட வசதியை உருவாக்கும் வகையில் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மு.அ.சித்திக், போக்குவரத்துத் துறைச் செயலா் மா.வள்ளலாா், சிறப்புச் செயலா் இரா.லில்லி, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபு சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.