முதல்கட்டமாக தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்களின் நீா் ஆதாரமான காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உபரிநீரை மட்டும் கா்நாடகம் வழங்குகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டப்படும்.
முல்லைப் பெரியாறு: தென் மாவட்டங்களின் உயிா்நாடியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியில் இருந்து 152-ஆக உயா்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அங்கு புதிய அணையை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து, நீா்மட்டத்தை உயா்த்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
ஊழலற்ற நிா்வாகம் மூலம் பொருளாதார மறுமலா்ச்சி: ஆளுநா் உரையில் தமிழக அரசு உறுதி
கோயில் சொத்துகள் தணிக்கை செய்யப்படும்: ஆளுநா் உரையில் தமிழக அரசு
இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம்: பேரவை உரை குறித்து ஆளுநா் ஆா்லேகா் கருத்து
ஆளுநா் உரையில் முக்கிய அம்சங்கள்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



