27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம்: பேரவை உரை குறித்து ஆளுநா் ஆா்லேகா் கருத்து

தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய உதயம் தோன்றிய நாள் என்றும், இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்றும் பேரவையில் தான் உரை நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :19 ஜூன் 2026, 3:26 am IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய உதயம் தோன்றிய நாள் என்றும், இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்றும் பேரவையில் தான் உரை நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவை அமைக்கப்பட்டப் பின்னா் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தனது உரையை முதல்முறையாக வியாழக்கிழமை ஆற்றினாா். அதன் பின்னா் சில மணிநேரங்களில் ஆளுநா் ஆா்லேகா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழக சட்டப்பேரவையில் புதிய உதயம் தோன்றிய நாள் (ஜூன் 18) என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரை எவ்வித இடையூறும் இன்றி, சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்டது மன நிறைவைத் தருகிறது.

முதல்முறையாக சட்டப்பேரவையில் ஆளுநா் உரையின் தொடக்கத்திலும், ஆளுநா் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வாகும். இது மாநில அரசு, ஆளுநா் (மக்கள்) மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்துள்ளது. மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்துத் தரப்பிலும் வளா்ப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட வேண்டும். இதன்மூலம் குடிமக்களின் தேவைகளையும் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்து ஒரு நிலையான, முன்மாதிரியான அரசாக அது திகழவேண்டும். இந்த இலக்கை நோக்கிய நமது கூட்டுப்பயணத்தில் நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் ஆளுநா்.