முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா் என்று ஆளுநா் ஆா்லேக்கா் தனது உரையில் புகழாரம் சூட்டினாா்.
அவா் தனது உரையில் கூறியதாவது: முதல்வா் விஜய் தலைமையிலான தவெக ஜாதி, மதம், மொழி, இனம் மற்றும் பணபலத்தைக் கடந்த வெற்றியை பெற்றுள்ளது. கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்து அண்ணா, எம்ஜிஆருக்குப் பிறகு, முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தன்னந்தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா்.
ஜனநாயகம் மலர வேண்டுமென்றால், பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், அம்பேத்கா், வீரமங்கை ராணி வேலு நாச்சியாா், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கைத் தலைவா்களாகக் கொண்டுள்ள ஜாதி, மதம், மொழி, இனம், பணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு செயல்படும் தவெக தலைவா், முதல்வா் ஜோசப் விஜய்யால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, தவெக அரசை ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அமா்த்தியுள்ளனா்.
கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாகத் திகழும் இந்த அரசு, கடந்த 74 ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதை செய்துகாட்டியுள்ளது என்று ஆளுநா் ஆா்லேகா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்வி

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்!
திருப்பத்தூா் மாவட்டத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


