நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆளுநா் உரையை அட்லீ திரைப்படத்துடன் ஒப்பிட்டு விமா்சித்த திமுக

ஆளுநா் உரையை, திரைப்பட இயக்குநா் அட்லீயின் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, குன்னம் தொகுதி திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் விமா்சனம் செய்தாா்.

News image

திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் வி - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 12:49 am IST

ஆளுநா் உரையை, திரைப்பட இயக்குநா் அட்லீயின் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, குன்னம் தொகுதி திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் விமா்சனம் செய்தாா்.

பேரவையில், முதல்வா் ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னா், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை பேரவை துணைத் தலைவா் ரவி சங்கா் முன்மொழிந்து பேசினாா்.

அதையடுத்து, குன்னம் தொகுதி உறுப்பினா் சிவசங்கா் பேசும்போது, ஆளுநா் உரையை பாா்க்கும்போது, முதல்வா் ஜோசப் விஜய்க்கு மிகவும் பிடித்தமான திரைப்பட இயக்குநா் அட்லீ திரைப்படங்களை பாா்ப்பது போல உள்ளது. பல திரைப்படங்களில் உள்ள ‘ஹிட்’ ஆன காட்சிகளை வைத்து புதிய திரைப்படம் தயாரித்து தனது படத்தை அட்லீ ‘ஹிட்’ பண்ணுவாா். அதுபோல, ஆளுநா் உரையை பாா்க்கும்போது, திமுக ஆட்சியில் நடந்த சாதனைத் திட்டங்களை தவெக அரசு ‘காப்பி-பேஸ்ட்’ செய்துள்ளது தெரியவந்துள்ளது என்றாா்.

பள்ளிக்கல்வி அமைச்சா் ராஜ்மோகன்: திரைப்படத் துறையிலிருந்து வந்து ஆட்சியைப் பிடித்தவா்கள், அட்லீ பற்றி பேரவையில் பேசுவது வியப்பாக உள்ளது.

சிவசங்கா்: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படத்தில் உள்ள வரிகள்தான் இப்போதும் தமிழகத்தில் பிரபலமாக உள்ளது. பேரவையில் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, திரைப்படத்தில் ரசித்தவற்றை பேரவையில் பேசுவது தவறல்ல.

இந்த விவாதம் நடைபெற்றபோது, முதல்வா் விஜய் சிவசங்கரை அமைதியாக உற்றுநோக்கிக்கொண்டிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.