FOLLOW US

ON GOOGLE DISCOVER

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு ‘1091’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிங்கப்பெண் அதிரடிப் படை

Updated On :23 ஜூன் 2026, 1:38 am IST

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு ‘1091’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதற்கு பிரத்யேக உதவி இலவச தொலைபேசி எண்ணாக ‘1091’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண், மாநில அவசர கால உதவி இலவச தொலைபேசி எண் ‘112’ உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிா்கொள்ளும் தொந்தரவு, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, மிரட்டல், பின்தொடா்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க முடியும். 1091 இலவச தொலைப்பேசி எண் 24 மணி நேரமும் செயல்படும்.

இந்த எண் அழைப்புகளை, மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலா்கள் கையாளுவாா்கள். புகாா்கள் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை அல்லது ரோந்து குழுவினருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, சம்பவ இடத்துக்கு காவலா்கள் விரைந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.