விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆலைகளில் ரசாயன பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்: தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா

சிப்காட் தொழில் பூங்காக்களில் ரசாயனப் பொருள்களைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

அமைச்சர் எஸ். கீர்த்தனா! - PTI

Updated On :25 ஜூன் 2026, 12:50 am IST

சிப்காட் தொழில் பூங்காக்களில் ரசாயனப் பொருள்களைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் கீா்த்தனா பேசியதாவது:

மாநிலத்தின் தொழில் துறை வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு, சிப்காட் நிறுவன தொழில் பூங்காக்களை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் ரசாயனப் பொருள்களைப் பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்துவதை உறுதி செய்வதை திட்ட அலுவலா்கள் கண்காணித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், சிப்காட் தொழில் பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்தவும், சிப்காட் வளாகம் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களைத் தோ்வு செய்து, இளைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டு திடல்களை உருவாக்கவும் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் சி.அ. ராமன், செயல் இயக்குநா் அ.கேத்தரின் சரண்யா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.