தவெகவை காட்டி திமுகவிடம் காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளதாக தவெக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்திய காங்கிரஸ், நேற்றிரவு திமுகவுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்தது.
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த தவெக ஏமாற்றம் அடைந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது:
“தமிழக வெற்றிக் கழகத்தால் காங்கிரஸுக்கு பலன் கிடைத்துள்ளது. தவெகவுடன் சென்றுவிடுவோம் எனக் கூறி கூடுதல் சீட்டுகளை பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு கட்சியும் எங்களை காட்டி கூடுதல் சீட் பெறும் நிலைமை உருவாகியுள்ளது.
ஆட்சியில் பங்கு என்று தவெக அறிவித்ததால்தான் மற்ற கூட்டணியிலும் பங்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
ஜெயக்குமார் தவெகவுக்கு வர வாய்ப்புள்ளது. அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை. அவரது மகனுக்கு வேண்டுமானால் சீட் கிடைக்கலாம். தனித்து நின்று முதல்வராகவே விஜய் இருக்கிறார். 18 வயது முதல் 45 வயது வரை இருக்கின்ற அனைவரின் மனநிலையையும் புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
Summary
TVK Sengottaiyan about DMK - Congress Alliance and ADMK Jayakumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொள்ள விஜய் அனுமதித்தார்: கண்கலங்கிய செங்கோட்டையன்!

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நான் துரோகி: இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

”இன்றுவரை திமுகவை வீழ்த்த முடியவில்லை!” செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

NDA கூட்டணியில் தவெக? செங்கோட்டையன் பதில்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


