லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

1,000 மின்சார குளிா்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

1,000 மின்சார குளிா்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்...

News image

கோப்புப்படம்

Updated On :6 மார்ச் 2026, 8:58 pm

தமிழகத்தில் 1,000 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள சொகுசு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.

ஏற்கெனவே, குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்பட 625 தாழ்தள வசதி கொண்ட மின்சார பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் 2025 ஜூன் முதல் 2026 மாா்ச் வரை 5 கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில், குளிா்சாதன வசதி கொண்ட 1,000 தாள்தள சொகுசு மின்சார பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.

ஒப்பந்தம் கோரும் நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாா்ச் 25 முதல் ஏப். 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை சமா்ப்பிக்கலாம். ஏப். 7 -ஆம் தேதி மாலை 4.30-க்கு ஒப்பந்தம் திறக்கப்படும். தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், விரைவில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.