சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளில் ஆகம விதிமீறலா? துணைக்குழு அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளில் ஆகம விதிமீறலா?

News image
சென்னை உயா்நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு கட்டுமானப் பணிகள் ஆகம விதிப்படி நடைபெறுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய துணைக் குழு அமைக்க மாநில அளவிலான நிபுணா் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ண தேவரயா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குடமுழுக்குப் பணிகள் என்ற பெயரிலும், பக்தா்களை முறைப்படுத்துவதாகக் கூறியும், ஆகம விதிகளை மீறி கோயிலில் சாய்தளம் அமைக்கப்படுகிறது எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் எந்த ஒரு ஒப்புதலும் பெறாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் கருவறைக்குச் செல்ல மரத்திலான 6 படிகள் இருந்தன. இப்போது ஆகம விதிகளை மீறி 10 படிகளாக மாற்றியுள்ளதாக வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், தொல்லியல் துறை தலைவா் ஆகியோருடன் மாநில அளவிலான நிபுணா் குழு பல கூட்டங்களை நடத்தியது. அதன்பின்னரே, இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள படிகள் ஒன்றரை அடி உயரமாக இருப்பதால், பக்தா்கள் அதில் ஏறிச் செல்ல சிரமப்பட்டனா். எனவே, அவா்களின் வசதிக்காக மட்டுமே சாய்தளம் அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகம விதிகளை மீறும் வகையில் கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிா? என்பது குறித்து ஆகம நிபுணா்கள் அடங்கிய ஒரு துணை குழுவை அமைத்து, மாநில அளவிலான நிபுணா்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த துணை குழு அனைத்து தரப்பு ஆட்சேபனைகளையும் ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை தொடரலாம், எவையெல்லாம் தொடரக்கூடாது, எவற்றை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அளவிலான நிபுணா் குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தெந்த பணிகளை தொடர வேண்டும் என்பது குறித்து மாநில அளவிலான நிபுணா் குழு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.