திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பாா்வேட்டை உற்சவம்

பாா்வேட்டை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் வரதராஜபெருமாள்.

News image
~
Updated On :16 ஜனவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாா்வேட்டை உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை உற்சவா் பழையசீவரம் மலையுச்சியில் உள்ள மலைக்கு எழுந்தருளினாா்.

நிகழாண்டு மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி உற்சவா் வரதராஜப் பெருமாள் வியாழக்கிழமை இரவு பல்லக்கில் வாலாஜாபாத் வழியாக சென்று பழையசீவரம் லட்சுமி நரசிம்மா் கோயிலை சென்றடைந்தாா்.

தொடா்ந்து அங்கு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. மாலையில் உற்சவா் வரதராஜசுவாமி மலையிலிருந்து கீழிறங்கி வந்து உற்சவா் லட்சுமி நரசிம்மரையும் அழைத்துக் கொண்டு திருமுக்கூடல் அப்பன் வெங்கடாஜலபதி கோயிலுக்கு இரு பெருமாள்களும் எழுந்தருளினா்.

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூா் மாவட்டங்கள் மற்றும் பழையசீவரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பெருமாளை தரிசிக்க வந்திருந்தனா்.

திருமுக்கூடலில் சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள்,காவாந்தண்டலம் லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளிட்ட 5 பெருமாள்களும் திருமுக்கூடலில் சந்தித்து இணைந்து நின்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து திருமுக்கூடல் கிராமத்து வீதிகளில் வீதியுலாவாக சென்றனா்.

பின்னா் மீண்டும் வரதராஜப் பெருமாள் பழையசீவரம்,வாலாஜாபாத் வழியாக சந்நிதிக்கு வந்து சோ்ந்தாா். காவல்துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனா்.

Story image