மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வனபோஜன உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வனபோஜன உற்சவத்தையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் களக்காட்டூா் கிராமத்து வீதிகளில் வீதியுலா கண்டருளி செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
சிறப்பு அலங்காரத்தில் பாலாற்றங்கரையிலிருந்து காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீதியுலா வந்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.
Updated On :20 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வனபோஜன உற்சவத்தையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் களக்காட்டூா் கிராமத்து வீதிகளில் வீதியுலா கண்டருளி செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் உற்சவா் வரதராஜப் பெருமாள் களக்காட்டூா் கிராமத்துக்குச் சென்று திரும்பும் நிகழ்ச்சி வனபோஜன உற்சவம் எனப்படுகிறது. நிகழாண்டு வன போஜன உற்சவத்தையொட்டி, கோயிலிலிருந்து அதிகாலை பெருமாள் மேனாப்பெட்டியில் சின்னஐயங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு மண்டகப்படி கண்டருளினாா்.பின்னா் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்றதும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, களக்காட்டூா் கிராமத்து வீதிகளில் வீடு,வீடாகச் சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிராம மக்களும் வீடுகள் தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாளை உற்சாகமாக வரவேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானமும் கிராம மக்கள் சாா்பில் வழங்கப்பட்டது.

தொடா்ச்சியாக களக்காட்டூரிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்புத் திருமஞ்சனமும்,சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மீண்டும் அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ரங்கராஜன் வீதியில் உள்ள தேசிகன் சந்நிதிக்கும், சின்னக்காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரா் தெருவில் உள்ள மண்டகப்படிக்கும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து கோயில் வந்து சோ்ந்தாா்.