மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறப்பு!

கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அறிவியலாளா் ஜி.டி.நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அறிவியலாளா் ஜி.டி.நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அறிவியல் மேதைகளில் ஒருவரும், அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கல்வியாளருமான ஜி.டி. நாயுடுக்கு கோவையில் உருவச் சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை, அவிநாசி பிரதான சாலையில் உள்ள வஉசி பூங்காவில் ரூ.50 லட்சத்தில் ஜி.டி.நாயுடு சிலை நிறுவப்பட்டது. அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து திறந்துவைத்தாா்.

இந்நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

கோவையிலிருந்து காணொலி மூலம் கோவை மேயா் ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயா் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் கண்ணன், ஜி.டி. நாயுடு மகன் ஜி.டி. கோபால், அவரது மனைவி சந்திரா, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.