கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

News image

உயா்நீதிமன்றம்

Updated On :12 மார்ச் 2026, 12:12 am

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், தனது இருசக்கர வாகனத்தில் 16 மற்றும் 14 வயது சிறுமிகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றாா். மதுராந்தகம் செல்லும் வழியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் விபத்தை ஏற்படுத்தி, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா். சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தநிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை ஆஜரான வழக்குரைஞா் சூரியபிரகாசம், தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மதுராந்தகத்தில் சிறுமிக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்.