திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
நான்குனேரி காவல் சரகம், பெரும்பத்து கடைவீதியில் அண்மையில் 9 போ் கொண்ட கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வடமாநில செங்கல்சூளை தொழிலாளி திருநாத் கட்டா, பெரும்பத்து இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த ஜான் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 9 பேரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் முன் வெள்ளிக்கிழமை முன்னிலையான வழக்குரைஞா் கே. செல்வகுமாா், நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டாா். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவா்களுக்கும் தமிழக அரசு எந்தவித நிவாரணமும் இதுவரை அறிவிக்கவில்லை எனவும், புலம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குடும்பங்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் கிடைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவா் கோரினாா்.
இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அரசு வழக்குரைஞா் உரிய அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை: 8 பேரிடம் விசாரணை

நான்குனேரி கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


