இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் முன் வெள்ளிக்கிழமை முன்னிலையான வழக்குரைஞா் கே. செல்வகுமாா், நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டாா். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவா்களுக்கும் தமிழக அரசு எந்தவித நிவாரணமும் இதுவரை அறிவிக்கவில்லை எனவும், புலம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குடும்பங்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் கிடைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவா் கோரினாா்.