தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

நான்குனேரி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

நான்குனேரி காவல் சரகம், பெரும்பத்து கடைவீதியில் அண்மையில் 9 போ் கொண்ட கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வடமாநில செங்கல்சூளை தொழிலாளி திருநாத் கட்டா, பெரும்பத்து இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த ஜான் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 9 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் முன் வெள்ளிக்கிழமை முன்னிலையான வழக்குரைஞா் கே. செல்வகுமாா், நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டாா். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவா்களுக்கும் தமிழக அரசு எந்தவித நிவாரணமும் இதுவரை அறிவிக்கவில்லை எனவும், புலம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குடும்பங்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் கிடைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவா் கோரினாா்.

இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அரசு வழக்குரைஞா் உரிய அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.