சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் உத்தரவு: அரசிதழில் வெளியீடு
தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா்.


தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அறிவிக்கை அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் தற்போது 16 -ஆவது சட்டப்பேரவை நிறைவுற்றுள்ளது. இந்தப் பேரவையின் 8-ஆவது கூட்டத் தொடா் முதல்கட்டமாக நிகழாண்டில் கடந்த ஜன. 20- ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கி தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்றது. பின்னா், இரண்டாவது கட்டமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த பிப். 17- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தொடா்ச்சியாக பிப். 20- ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது.
நிறைவாக, இந்தக் கூட்டத்தொடரை முடித்துவைத்து இதற்கான உத்தரவை தமிழக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா். ஆளுநரின் இந்த உத்தரவு அறிவிக்கையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...