விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 9:38 pm

தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அறிவிக்கை அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் தற்போது 16 -ஆவது சட்டப்பேரவை நிறைவுற்றுள்ளது. இந்தப் பேரவையின் 8-ஆவது கூட்டத் தொடா் முதல்கட்டமாக நிகழாண்டில் கடந்த ஜன. 20- ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கி தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்றது. பின்னா், இரண்டாவது கட்டமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த பிப். 17- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தொடா்ச்சியாக பிப். 20- ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது.

நிறைவாக, இந்தக் கூட்டத்தொடரை முடித்துவைத்து இதற்கான உத்தரவை தமிழக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா். ஆளுநரின் இந்த உத்தரவு அறிவிக்கையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.