தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அறிவிக்கை அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் தற்போது 16 -ஆவது சட்டப்பேரவை நிறைவுற்றுள்ளது. இந்தப் பேரவையின் 8-ஆவது கூட்டத் தொடா் முதல்கட்டமாக நிகழாண்டில் கடந்த ஜன. 20- ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கி தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்றது. பின்னா், இரண்டாவது கட்டமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த பிப். 17- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தொடா்ச்சியாக பிப். 20- ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது.
நிறைவாக, இந்தக் கூட்டத்தொடரை முடித்துவைத்து இதற்கான உத்தரவை தமிழக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா். ஆளுநரின் இந்த உத்தரவு அறிவிக்கையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


