பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 223-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உள்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நக்கீரன் கோபால் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனா் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக எழும்பூா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தேன். பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 223-ஆவது பிரிவின்படி, குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய சட்டத் திருத்தத்தின் காரணமாக புகாா்தாரா்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும். இந்த சட்டத் திருத்தம் உரிய நேரத்தில் நீதி பரிபாலனம் செய்வதற்கு எதிராக உள்ளது.
எனவே இந்த சட்டப் பிரிவுகளில் உள்ள முரண்பாடுகளை நீக்கி உரிய விசாரணை நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசின் உள்துறை, சட்டம் மற்றும் நீதித் துறை செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் இந்த வழக்கை பிஎன்எஸ்எஸ் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளுடன் இணைத்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் மீட்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


