சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி நேற்று(மார்ச் 15) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றும் பணிகள் இன்று காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுவர் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை சார்பாக பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள், துப்பாக்கிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் தங்களது துப்பாக்கிகளை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Summary
With the coming into force of the Assembly election code of conduct, the work of painting over wall advertisements and removing posters is in full swing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

சுவர் விளம்பரங்களுக்கு தொடரும் மவுசு...!

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’

தேர்தல் விதிமுறை: ஆணையத்தின் அனுமதியின்றி இவற்றைச் செய்யலாம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


