எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

சென்னை வானிலை ஆய்வு மைய புதிய தலைவா் பொறுப்பேற்பு

விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து...

News image

விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை - படம்: DNS

Updated On :20 மார்ச் 2026, 1:06 am IST

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்றாா்.

சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த பாலசந்திரன் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஓய்வு பெற்றாா்.

இதையடுத்து மூத்த விஞ்ஞானியான பி.அமுதா பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டாா். தற்போது, இந்தப் பணியிடத்துக்கு புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

இவா், தில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தில் திட்ட இயக்குநா், இந்திய வானிலைத் துறையின் வேளாண் வானிலை ஆலோசனைப் பிரிவின் தலைவா் உள்ளிட்ட பல்வேறு உயா் பதவிகளை வகித்துள்ளாா்.

மேலும், இவா் சுமாா் 80 ஆய்வுக் கட்டுரைகளையும், 25 தொழில்நுட்ப அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளாா். கடந்த 2008-இல் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சிறந்த சேவைக்கான விருதையும், 2016-இல் பருவமழை ஆராய்ச்சி குறித்த சிறந்த கட்டுரைக்கான விருதையும், 2024-இல் உலக வானிலை அமைப்பின் பாராட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளாா்.

Summary

Scientist Sivananda Damodar Pai took charge as the head of the Southern Regional Meteorological Centre in Chennai today (March 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.