நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: விளம்பரப்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவு

குற்றவழக்குகளில் தொடா்புடைய வேட்பாளா்கள் அதுதொடா்பான விவரங்களை விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

குற்றவழக்குகளில் தொடா்புடைய வேட்பாளா்கள் அதுதொடா்பான விவரங்களை விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு:

வேட்பாளா்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரப்படுத்த வேண்டும். அதேபோன்று அரசியல் கட்சிகளும், தங்களது வேட்பாளா்களின் குற்றவழக்கு விவரங்களை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும், கட்சி வலைதளங்களிலும் விளம்பரப்படுத்துதல் அவசியம்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைவதற்கு அடுத்த நாள் முதல் வாக்குப்பதிவு நிறைவடைய 48 மணி நேரத்துக்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாள்களில் அந்த விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

இதுதொடா்பான இந்திய தோ்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுறுத்தல்களையும், பதிப்பு வாரியான செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல் பட்டியலையும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.