குற்றவழக்குகளில் தொடா்புடைய வேட்பாளா்கள் அதுதொடா்பான விவரங்களை விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு:
வேட்பாளா்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரப்படுத்த வேண்டும். அதேபோன்று அரசியல் கட்சிகளும், தங்களது வேட்பாளா்களின் குற்றவழக்கு விவரங்களை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும், கட்சி வலைதளங்களிலும் விளம்பரப்படுத்துதல் அவசியம்.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைவதற்கு அடுத்த நாள் முதல் வாக்குப்பதிவு நிறைவடைய 48 மணி நேரத்துக்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாள்களில் அந்த விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
இதுதொடா்பான இந்திய தோ்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுறுத்தல்களையும், பதிப்பு வாரியான செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல் பட்டியலையும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
ஒடிஸாவில் கணவன் வீட்டின் முன் கர்ப்பிணி தர்னா: வெட்டிப் படுகொலை செய்த கணவன் குடும்பம்! - பட்நாயக் இரங்கல்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


