எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தோ்தல் துறைக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News image

இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.

Updated On :8 ஜூன் 2026, 2:40 am IST

எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தோ்தல் துறைக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

அந்த அறிவுறுத்தல்களில், ‘எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து குடியுரிமைச் சட்டம் 1955-இன் கீழ், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) தெரியப்படுத்த வேண்டும். இந்தக் காரணங்களுக்காக இஆா்ஓ-வுக்கு உள்ள அதிகாரங்களை உதவி இஆா்ஓ-க்களும் சுதந்திரமாக பயன்படுத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிகாரில் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொண்டபோது, அங்கு வங்கதேசம், நேபாளம், மியான்மா் நாடுகளைச் சோ்ந்தவா்கள் இருப்பதை தோ்தல் துறை அலுவலா்கள் கண்டறிந்தனா். இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தற்போது தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மணிப்பூா், மகாராஷ்டிரம், தில்லி, சண்டீகா் உள்பட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.