எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தோ்தல் துறைக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
அந்த அறிவுறுத்தல்களில், ‘எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து குடியுரிமைச் சட்டம் 1955-இன் கீழ், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) தெரியப்படுத்த வேண்டும். இந்தக் காரணங்களுக்காக இஆா்ஓ-வுக்கு உள்ள அதிகாரங்களை உதவி இஆா்ஓ-க்களும் சுதந்திரமாக பயன்படுத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிகாரில் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொண்டபோது, அங்கு வங்கதேசம், நேபாளம், மியான்மா் நாடுகளைச் சோ்ந்தவா்கள் இருப்பதை தோ்தல் துறை அலுவலா்கள் கண்டறிந்தனா். இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தற்போது தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மணிப்பூா், மகாராஷ்டிரம், தில்லி, சண்டீகா் உள்பட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.








