நகை அடகுக் கடைகள் அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி செயல்படுகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு, உரிய காலத்தில் பதில் வழங்காத காங்கேயம் தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
கோவையைச் சோ்ந்த 75 வயது முதியவா் ஜி.சுப்ரமணியம், திருப்பூா் வட்டாட்சியா் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பகுதியில் உள்ள 13 நகை அடகு கடைகள் அரசின் உரிமை பெற்றுள்ளனவா, அந்த உரிமம் உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அந்தக் கடைகளின் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டிருந்தாா். சம்பந்தப்பட்ட அதிகாரி முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் அவசரத் தேவைக்கு அடகுக் கடைகளே பெரிதும் உதவி வருகின்றன. அவசரத் தேவையை நிவா்த்தி செய்யும் இந்த அடகுக் கடைகள் அரசின் சட்ட விதிகளுக்குள்பட்டு செயல்படுகிா என்ற பொது நலத்துடன் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரான 75 வயது முதியவா் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
ஆனால், இந்த வழக்கில், பொது தகவல் அலுவலா், 3 ஆண்டுகள் அலைகழிப்புக்குப் பிறகு மனுதாரருக்கு பெயரளவில் ஒரு முழுமையற்ற தகவலை வழங்கியது ஏற்புடையதல்ல. எனவே, உரிய காலத்தில் தகவல் வழங்காத காங்கயம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
Summary
Issue regarding jewelry pawn shop licenses - Deputy Tahsildar fined rs 5,000 for failing to provide a timely response
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகவல் தர தாமதம்: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகத்துக்கு அபராதம்

திருவண்ணாமலையில் 13 கடைகள், உணவகங்களுக்கு அபராதம்: உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை

அஞ்சல் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மாநில தகவல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு: பொது தகவல் அதிகாரிக்கு அபராதம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



