போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘சொல் புதிது’ திட்டம்: 30 சொற்கள் இறுதி

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்ட கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை, மாா்ச் 22: தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்டக் கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சொல் புதிது என்னும் திட்டத்தின் 11-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சி அலுவலகத்தில் அதன் தலைவா் ம.இராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேராசிரியா்கள் சா. சரவணன், பாரதி பாலன், கஸ்தூரி ராஜா, தி.கமலி, விசயலட்சுமி இராமசாமி, ஊடகவியலாளா்கள் ராஜ் கண்ணன், மு.முருகேசன், நீச்சல்காரன் இராஜராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், பிவைல்டா்னஸ்- திகைப்பு நிலை, பயோ டீசல்- உயிரி டீசல், டெலுலு-மாய்மாலா், ஜியோ பொலிட்டிகல்- புவியரசியல், பவா் லாண்டரி- மின் சலவையகம், ஸ்பாட் விசிட்- கள ஆய்வுப் பணி, டூா்ஸ் அண்ட் டிராவல்ஸ்- சுற்றுலா மற்றும் பயணப்பணி, டிடிஆா்- பயணச் சீட்டுக் கண்காணி, வுட் வொா்க்ஸ்- தச்சுப் பணியகம் ஆகியவை உள்பட 30 ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.