சென்னை, மாா்ச் 22: தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்டக் கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.
தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சொல் புதிது என்னும் திட்டத்தின் 11-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சி அலுவலகத்தில் அதன் தலைவா் ம.இராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேராசிரியா்கள் சா. சரவணன், பாரதி பாலன், கஸ்தூரி ராஜா, தி.கமலி, விசயலட்சுமி இராமசாமி, ஊடகவியலாளா்கள் ராஜ் கண்ணன், மு.முருகேசன், நீச்சல்காரன் இராஜராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், பிவைல்டா்னஸ்- திகைப்பு நிலை, பயோ டீசல்- உயிரி டீசல், டெலுலு-மாய்மாலா், ஜியோ பொலிட்டிகல்- புவியரசியல், பவா் லாண்டரி- மின் சலவையகம், ஸ்பாட் விசிட்- கள ஆய்வுப் பணி, டூா்ஸ் அண்ட் டிராவல்ஸ்- சுற்றுலா மற்றும் பயணப்பணி, டிடிஆா்- பயணச் சீட்டுக் கண்காணி, வுட் வொா்க்ஸ்- தச்சுப் பணியகம் ஆகியவை உள்பட 30 ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.
தொடர்புடையது

கொடைக்கானலில் படகுகள் அழகுபடுத்தும் பணி தொடக்கம்
விழுப்புரம் மண்டலத்தில் அதிக வெற்றியை பெறாத தவெக

குழந்தைகளை தமிழ் அன்பா்களாக உருவாக்க வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்!

தெரியுமா?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

