ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Eid Mubarak Special Prayer

ஆயங்குடி பகுதியில் ஈக்தா திடலில் ரமலான் சிறப்பு தொழுகை - DNS

Published On :21 மார்ச் 2026, 9:38 am IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவி்ல் அருகே உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை சனிக்கிழமை (மார்ச் 21) காலை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் உற்ச்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரமலான் திருநாளை முன்னாட்டு, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈக்தா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஈதுல்பித்ர் எனும் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி, ஆயங்குடி ஈக்தா திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனை ஹஜ்ரத் முகம்மதுஆரிப் உலவியு தலைமையில் நடைபெற்றது.

தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர், சகோதரத்துவத்தைப் போற்றும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

Summary

Special Ramadan prayers at Ayangudi, Cuddalore!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.