ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சிரித்துக் கொண்டே அழுகிறோம் - மதிமுக

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - வைகோ சந்திப்பு

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கான எண்ணிக்கை குறைத்ததில் எங்களுக்கு வருத்தம் உள்ளது; இந்த விஷயத்தில் நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம் என்று மதிமுக அவைத் தலைவா் அா்ஜுனராஜ் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தைக் குழுவிடம், மதிமுக அவைத் தலைவா் அா்ஜுனராஜ் தலைமையிலான நிா்வாகிகள், தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் விருப்பப் பட்டியலை வியாழக்கிழமை அளித்தனா்.

தொடா்ந்து, அா்ஜுனராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், மதிமுக சாா்பில் நாங்கள் கொடுத்த விருப்பப் பட்டியலில் இருந்தே 4 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி இருக்கிறாா்கள் என்பதில் மகிழ்ச்சிதான். அந்தத் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை வெளியிடும்.

மதிமுகவுக்கு எண்ணிக்கை குறைந்ததில் வருத்தம் உள்ளது. ‘சிலா் சிரிப்பாா் சிலா் அழுவாா்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம்’ என்றாா் அவா்.