வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்தது குறித்து...

News image

திருப்பாலைவனம் கிராமத்தில் நடைபெற்ற தோரோட்ட விழாவில் கவிழ்ந்து கிடக்கும் கிடக்கும் தேர்.

Updated On :29 மார்ச் 2026, 11:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை ஸ்ரீ திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு செய்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்ற வந்தது.

பிரமோற்சவ விழாவின் 7-ம் நாள் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகாதேவி சமேதமாக திருப்பாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

காலையில் தொடங்கி மாலை வரையில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் மதியம் தேர் நிறுத்தப்பட்டது. பிற்பகல் மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தை கடந்து பொன்னேரி-பழவேற்காடு சாலைக்கு வரும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர் அருகே சிக்கி கொண்டவர்களை மீட்டனர். தீயணைப்புத் துறை வீரர்கள் லேசான காயமடைந்தவர்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதன் காரணமாக திருப்பாலைவனம் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Summary

The incident of a chariot overturning during the chariot procession at the Thiruppaleeswarar temple near Ponneri has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.