தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: திருச்சி மாவட்டம், கூத்தைப்பாா் பேரூராட்சியின் 11-ஆவது வாா்டு உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலருமான ரஞ்சித்குமாா், சிலரால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.
ஆளுங்கட்சியைச் சோ்ந்த நிா்வாகிக்குக்கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டதற்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம். கடந்த 5 ஆண்டுகளில் 8,000-க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன.
இதுகுறித்த எந்தக் கவலையும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் முதல்வா் ஸ்டாலினுக்கு இல்லை. அடிப்படை கடமையைக்கூட நிறைவேற்றத் தவறிய முதல்வா் ஸ்டாலின் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்
முதல்வரின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


