தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் அவுட்.. எடப்பாடியார் இன் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தர் ஆலயம் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி ஒட்டி இன்று அதிகாலை முதலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது,
முன்னாள் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் , காஞ்சிபுரம் சட்டப்பேரவை வேட்பாளருமான சோமசுந்தரம் மற்றும் வாலாஜாபாத் கணேசன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் உற்சவர் சித்தரகுப்தர் கண்ணகி அம்மன் முன்பு தனது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி சிறப்புப் பூஜை மேற்கொண்டு 14 அணை தீபங்கள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கருத்துக்கணிப்புகள் என்பது நிஜமாகாது கடந்த தேர்தலின்போது அதிமுக தோல்வியைத் தழுவும் எனக் கூறிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றது.
அதேபோன்று மக்களின் மனநிலையை நன்கு அறிந்து வாக்களித்துள்ளனர். வரும் நான்காம் தேதி முடிவுக்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் அவுட் எடப்பாடியார் இன் என்ற முறையில் ஆட்சி அமைப்பார்.
விஜயகாந்த் புதியதாகக் கட்சி துவங்கிய பின் அதிமுகவுடன் இணைந்த பின்பே எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், அதன்பின் எந்தத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெற இயலவில்லை. பல நடிகர்கள் புதிதாகக் கட்சிகள் துவங்கினாலும் அவர்கள் என்றுமே வெற்றி பெற்றதில்லை. அதில் விதிவிலக்கு புரட்சித் தலைவர் மட்டுமே எனத் தெரிவித்தார்.
Summary
Former Minister Kadambur Raju has stated that, based on the Tamil Nadu Legislative Assembly election results, Stalin is "out" of Fort St. George, while Edappadiyar is "in."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்!

ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில் உக்ரைன் பதிலடி தாக்குதல்

முதல்வா் ஜோசப் விஜய் இன்று திருச்சி வருகை
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




