நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீண்டும் இயக்குநராக புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசஃப், இரட்டா படங்களின் மூலம் அபாரமான நடிப்புத் திறன் கொண்டவர் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். முக்கியமாக, நடிகர் கமல் ஹாசனும் ஜோஜூ நடிப்பைப் பாராட்டியது பெரிதாகக் கவனிக்கப்பட்டது.
ஜோஜூ இயக்கிய பனி திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. இன்றும் பனி திரைப்படத்தைப் பாராட்டி கருத்துகள் பகிரப்படுகின்றன.
இந்த நிலையில், ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, 100 புதுமுக நடிகர்களை ஜோஜூ அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர, கதாபாத்திர தேர்வுகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம்.
படத்தின் படப்பிடிப்பு கேரளம் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2018, ரேகா சித்திரம், ஆடு - 3 ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த காவ்யா பிலிம் கம்பெனி நிறுவனம் இப்படத்தைப் பெரிய பொருள்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Actor Joju George is set to direct a new film once again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!
வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்ஆா்எஃப் அருண் மாமன் மீண்டும் தோ்வு!

பிருத்விராஜுடன் இணையும் ராகுல் சதாசிவன்!
புதிய திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


