நடிகர் மோகன்லால் இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் ஹிருதயப்பூர்வம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 80 கோடி வரை வசூலித்தது.
மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சத்யன் தொடச்சியாக அடுத்தடுத்த படங்களை இயக்கக்கூடியவர் என்பதால் ஹிருதயப்பூர்வம் படத்தைத் தொடர்ந்து யாரை இயக்குவார் என்கிற கேள்வி இருந்தது.
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் மீண்டும் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actor Mohanlal is set to act once again under the direction of Sathyan Anthikad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







