விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக கூட்டணிக் கட்சிகள் நிறுத்த முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.எஸ். பாரதி சந்தேகம்

News image

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 7:45 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக கூட்டணிக் கட்சிகள் நிறுத்த முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்கவும், சட்டம் - ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தவும் பாஜக முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், டிஜிபி-க்கும் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்த, வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஏதேனும் செய்ய திட்டமிட்டிருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது.

ஆகவே, எந்தப் புகார்கள் வந்தாலும், அவை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில், நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, மாலைவரையில் எதுவும் செய்ய மாட்டார்கள்.

பிரச்னையை ஆரம்பிக்கலாமா? வாக்கு எண்ணிக்கையை நிறுத்தலாமா? என எதை வேண்டுமானாலும் பாஜக செய்யும்.

கடைசி நேரத்தில், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையமும் பாஜகவின் 'பி' அணியாக செயல்படுகிறது. இதனைத்தான் நாடு முழுவதுமுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சொல்கின்றன. சில நேரங்களில், தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம்கூட கண்டித்திருக்கிறது. இருப்பினும், திமுக எதையும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறது" என்று அமைச்சர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

Summary

BJP Attempts to Halt Vote Counting: DMK Writes to Election Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.