மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில், பாஜக வெற்றி பெற்ற மறுநாளே பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
அன்சோல் உத்தர் தொகுதிக்குட்பட்ட துர்கா தேவி கோயிலைத் திறக்கக் கோரி பலமுறை உள்ளூர் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி அமைத்த மறுநாளே திறக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் அன்சோல் உத்தர் தொகுதியில் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில் பக்தர்களுக்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
அன்சோல் உத்தர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணந்து முகர்ஜி வெற்றி பெற்ற பிறகு இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது துர்கா தேவி கோயில் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது அந்தத் தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், மறுநாளே கோயில் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு வங்க அரசியலில் மாற்றம் நிகழ்ந்த நிலையில், கோயில் திறக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு







